சுரேகாவின் படைப்புகள்

Writings since 2006 — வாழ்க்கை, தொழில், பிராண்ட், சமூகம் குறித்த கட்டுரைகளும் கதைகளும்

2006 முதல் சுரேகா எழுதி வரும் படைப்புகளின் முழுத் தொகுப்பு இது.
வலைப்பதிவில் (Blogger) வெளியான இந்தக் கட்டுரைகள், கதைகள், கவிதைகளில் பல — இந்திய மற்றும் வெளிநாட்டு தமிழ் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
வாழ்க்கை, தொழில், பிராண்ட், சினிமா, சமூகம் எனப் பன்முகப் பார்வையில் 300+ பதிவுகள்.
வகை, ஆண்டு அல்லது தேடல் மூலம் உங்களுக்குப் பிடித்ததைக் கண்டறியுங்கள்.
01 Dec 2007அனுபவம்

பெட்டி தொலைஞ்சு போச்சு...!

நாம்பாட்டுக்கும் செவனேன்னு இருந்தேங்க..! ஒரு அமைப்புல இத்தனாந்தேதி ஊட்டில கூட்டமிருக்கு...4

நாள் கண்டிப்பா வந்து கலந்துக்கணும்னு சொல்லிப்புட்டாங்க..! நம்மதான் ஊட்டின்னு பெரிய எழுத்துல பெருமைப்படுவோமா..? சரி சரின்னு போனுக்கு மண்டையை ஆட்டிட்டேன்.
(அப்பெல்லாம் தெரியாது...கெரகம் கீழ்வீட்லயே குடியிருக்குன்னு..)

திடீர்னு அதுக்கு மொத நாள் ஒரு அவசர வேலையா சென்னை போகவேண்டியிருந்தது.! சரி ! நம்ம பெட்டியை தூக்கிட்டு அலைய வேண்டாமேன்னு..நேரா சென்னைலருந்து ஊட்டிக்கு வெறுங்கையா
போய்டலாம்னு தெறமையா திட்டம்லாம் போட்டு சென்னைக்குப்போய்ட்டேன்.

திட்டம் என்னன்னா.. நம்ம ஆபீஸ் பையன் ஒருத்தனை என் பெட்டி, லாப்டாப் எல்லாம் எடுத்துக்கிட்டு வாப்பான்னு கெஞ்சி கேட்டுக்கிட்டு ஊட்டி வரச்சொன்னேன். அவனும் அதே மாதிரி பஸ் ஏறிட்டான். நானும் சென்னைல வேலையெல்லாம் முடிச்சுட்டு கிளம்பி ஊட்டி போயிட்ருக்கேன்.

இப்ப....நான் சென்னை - ஊட்டி

என் பெட்டி புதுக்கோட்டை - ஊட்டி

ராத்திரி ஒரு எடத்துல வண்டி நின்னுருக்கு ! நம்ம ஆள் எறங்கி, சாப்பிட்டு வந்து பாத்தா வண்டி எஸ்கேப்.. ( பக்கத்து பஸ் டிரைவரையே பாத்துக்கிட்டிருந்தானாம்.. நம்ம வந்த வண்டி டிரைவர்ன்னு நெனைச்சு) நல்ல வேளையா லாப்டாப் கையிலேயே வச்சிருந்திருக்கான். அப்ப பெட்டி...? அவ்வளவுதான்!
அவனும் பல ஜேம்ஸ்பாண்ட் வேலையெல்லாம் பாத்திருக்கான்..! ஒண்ணும் நடக்கல..!

பெட்டியைக் காணவில்லை.....(பஸ்ஸோட போயிருச்சு..)

இனிமே கெடைக்காதுன்னு தெரிஞ்சப்புறம் எனக்கு போன் அடிச்சான். அடப்பாவின்னு அடிவயிறு கலங்க, உடனடி முடிவா இப்ப என்ன பண்றதுன்னு யோசிச்சு மேட்டுப்பாளையத்தில் இறங்கி ஒரு ஜவுளிக்கடைல பூந்துட்டேன். காலைல 8:30 மணிக்கு ஒரு ஜவுளிக்கடை திறக்கும்போதே உள்ள
நொழஞ்சு, 'இந்த மாறி..இந்த மாறி ஆனதால இந்த மாறி..இந்த மாறி' துணியெல்லாம் வேணும்னு கேக்க அது 2 நிமிஷத்தில் கடையே பரவி, தாயத்து விக்கிற கரடியை பாக்குற மாதிரி பாக்குறாங்க மக்கா...

ஆனா நல்லா கவனிச்சாங்க..! அப்புறம் கவனிக்காமலா...? ஒருத்தன் இளிச்சவாத்தனமா எல்லா உடுப்பும் , ஒரு பெட்டியும் சேத்து வாங்குறான்னா..! எப்புடியோ கையில இருந்த இருப்பெல்லாம் போட்டு..,வாங்கி...கவுரதையா ஊட்டி கூட்டத்தில் கலந்துகிட்டேன்.. எல்லாரும் ஊட்டில 'ஹனிமூன்'தான் கொண்டாடுவாங்க..ஆனா நான் மட்டும் 'சனி மூன்' கொண்டாடினேன் சாமி...!
ஆனாலும் நான் ஒரே புலம்பல்..(சகாக்களிடம்தான்.)" நான் எடுத்துவந்து தொலைச்சிருந்தாகூட பரவாயில்லை...இன்னொருத்தன் தொலைச்சதுக்கு நான் அனுபவிக்க வேண்டியதாப்போச்சே ! ன்னு...
மொத்தத்துல எப்பவும்போல அந்த கூட்டத்துலயும் சொதப்பி..(கொஞ்சம் அதிகமாவே..பெட்டியைக் காணலைங்க..அதான்..) ஒரு வழியா ஊர் வந்து சேந்தேங்க..!

சரி..அதுக்கென்னங்கிறீங்களா...? ,இனிதான் இருக்கு இனிதான திருப்பமே...!
தனிப் பக்கத்தில் காண →
28 Nov 2007மொக்கை

வடை செய்யும் முறை பற்றி செய்யுள் ஒண்ணு....

கடலைப்பருப்புடனேகருவேப்பிலை சேத்து
கடலுப்பு சிறிதெடுத்துகடகடவென ஆட்டி
கணிசமாய் வெங்காயம் சேர்த்து
கருகிடாமல் சுட்ட வடை காண்பீரே...!


கவனமாய் உண்பீரே.!
எண்ணெய் கொஞ்சமா போட்டுக்குவீரே..!

சமைக்கிறோமோ இல்லையோ

நக்கல் நல்லா வருதுங்கோ...
தனிப் பக்கத்தில் காண →
24 Nov 2007கொசுவத்தி

தலை வெட்றதை பாக்குறீங்களா..?

அது ஒரு வெள்ளிக்கிழமை மதியம். நான் ஏதாவது காய் வாங்கி வரலாம்னு யான்பு அல் பஹாருக்குப் போனேன். காரை ஒரு மசூதிக்கிட்ட நிறுத்திட்டு திரும்பிப் பார்த்தா ஒரே கூட்டம். எல்லாம் கச முசன்னு பேசிக்கிட்டிருந்தாங்க!

நம்ம ஆள் ஒருத்தரிடம் கேட்டேன்: "என்னங்க கூட்டம்?"

"தல வெட்டப் போறாங்களாம்" (என்னவோ முடி வெட்டப்போறது மாதிரி சொன்னார்).

கொஞ்சம் அரண்டாலும், உள்ளே எட்டிப் பார்த்தேன்...

ரெண்டு ஆட்கள் கைகள் பின்னால் கட்டப்பட்டு மண்டி போட்டு வைக்கப்பட்டிருந்தாங்க.. மொத ஆள் கொஞ்சம் வயசானவர்...40-45ருக்கும். ரெண்டாவது ஆள் 30-35 வயசுள்ள வாலிபர்.

ஒரு குள்ளமான சௌதி ஒரு கடுதாசியை வச்சுப் படிச்சார்.. (என் ஒடைஞ்ச அரபை வச்சு புரிஞ்சிக்கிட்டேன்) "மொத ஆள் ஒரு பாகிஸ்தானி... பள்ளிக்கூடத்தில பசங்களுக்கு போதைப் பொருள் விற்கும்போது பிடிச்சோம். குற்றத்தை ஒத்துக்கிட்டான். ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்துக்கு புதன்கிழமை தீர்ப்பு கொடுத்திருக்கு... அது மரண தண்டனை.. இப்போ தலையை வெட்டப்போறோம். ஏதாவது ஆட்சேபனை உண்டா?"

கூட்டம் உடனே, "இல்லை! இல்லை!" னு சத்தம் போட்டது!

அடுத்து - குள்ளமான சௌதி மறுபடியும் படிச்சார்.. "ரெண்டாவது ஆள் ஒரு சூடானி.. வேலை பாத்த வீட்டுப் பெண்ணைக் கற்பழித்து, கொன்னு ப்ரிட்ஜில் வச்சிட்டான். தப்பிக்கும்போது மாட்டிக்கிட்டான். திங்கட்கிழமை நடந்த சம்பவத்துக்கு வியாழக்கிழமை தீர்ப்பு கொடுத்திருக்கு... அது மரண தண்டனை.. இப்போ தலையை வெட்டப் போறோம். ஏதாவது ஆட்சேபணை உண்டா?"

மறுபடியும் கூட்டத்தினர், "இல்லை! இல்லை!"னு சத்தம் போட்டாங்க!

நான் குசுகுசுன்னு பக்கத்து ஆளிடம் கேட்டேன்... "ஏன் ஏதாவது ஆட்சேபணை உண்டா?" ன்னு கேக்குறாங்க.. அவர் சொன்னாரு.. "அந்தக் குற்றவாளி நிரபராதின்னு நிரூபிக்க தகுந்த ஆதாரம் இருந்தா, அத வச்சு இப்போ தண்டனையை நிறுத்திவிட்டுப் போய்டுவாங்க.. அப்புறம் கோர்ட்டில் சொல்லி விடுவிச்சுடலாம்.. நம்ம சொன்னதில் தப்பு இருந்தாலோ, சும்மா சொல்லிட்டாலோ நமக்கும் சேத்து ஆப்புதான்..!" (கோர்ட்டை அவமதிச்சதுக்கு...)

இப்போ ஸீனுக்குள்ள ரெண்டு பெரிய சௌதிகள் வந்தாங்க... அவங்களோட ஒரு டாக்டரும் ரெண்டு உதவியாளர்களும் ஒரு வேனில் வந்திருந்தாங்க... ரெண்டு பெரிய சௌதிகளும் ஒரு பெட்டியை எடுத்து, அதிலிருந்து வாள்களை தேர்ந்தெடுத்தாங்க..!

மண்டி போட்டிருக்கும் ஆட்களைப் பார்த்து "யா அல்லா"ன்னு சொல்லச் சொன்னாங்க.. அவங்களும் சொன்னாங்க! பாகிஸ்தானி அழுக ஆரம்பிச்சுட்டார்... ரொம்ப பாவமா இருந்தது.

சூடானி கலங்கவே இல்லை...(அட..போங்கடா! நீங்களும் ஒங்க ஒலகமும்னு நெனச்சிருப்பான்.)

ஒரு கணம்தான்... (ரொம்ப வேகமா வாளை இறக்கலை... சாதாரண வேகம்தான்..)

மொதல்ல.. பாகிஸ்தானி தலையை வெட்டினாங்க.. அது முழுசா வெட்டுப்படலை. காயை அறுக்கிற மாதிரி அறுத்துத் தள்ளினாங்க..! அந்த இடமே ரத்தமா போச்சு..!

பிறகு சூடானி தலையை வெட்டினாங்க.. துண்டா போய் விழுந்தது. ரத்தம் பீய்ச்சி அடிச்சது..!

ஒடம்பு தனியா துடிக்குது...! அதைப் பார்த்ததாலே கை, காலெல்லாம் வெட வெடன்னு ஆடிப்போயிட்டேன்.

அந்த டாக்டரும் ரெண்டு உதவியாளர்களும் விறு விறுன்னு ஒடம்புகளையும், தலைகளையும் சேத்து வச்சுத் தச்சு ஒரு பாலிதீன் பையில் போட்டு வேனில் ஏத்திட்டாங்க..!

எல்லோரும் கலைஞ்சு போய்ட்டோம். நானும் பல்வேறு எண்ணங்களுடன் காய்கறி வாங்கிக்கிட்டு திரும்ப வந்து அந்த எடத்தைப் பார்த்தா... ரெண்டு சின்னப் பசங்க ஓடி வெளையாடிக்கிட்டு இருக்காங்க..

அன்னிக்கு ராத்திரி (அந்த வாரம் முழுதும்) தூங்கவே இல்லை.

ஒரு நொடி முன்னால் வரை உயிருடன் இருந்த மனிதர்கள் நம் அனைவர் முன்னிலையிலும் சட்டப்பூர்வமாக இறந்து போனார்கள்...
தனிப் பக்கத்தில் காண →
23 Nov 2007அரசியல்

'கர்நாடகத்தனம்'னா இதுதானா...?

நமக்கு காவிரித்தண்ணி தருவதில்தான் சிக்கல்னு பாத்தா..அவங்களுக்குள்ள ஆட்சி அமைக்கறதுலயும் அவ்வளவு சிக்கல் இருக்கும்போல!
சினிமாவெல்லாம் சும்மாங்கற மாதிரி அதிவேகமும் , முரட்டுத்திருப்பங்களும் நிறைஞ்சதால்ல இருக்கு இவுங்க பண்றது !

(இதுக்கு அப்புறம் வடிவேலு பாணி )

மொதல்ல முதலமைச்சரா குமாரசாமி வந்தாரு.."மாப்ள நான் கொஞ்ச மாசம் ஆண்டுக்குறேன்.அப்புறம் உனக்குத்தரேன்"னு பிஜேபி யோட கூட்டு போட்டாரு..

இவரு டைமும் முடிஞ்சதா..நேரா அவன்கிட்ட குடுக்கவேண்டியதுதானே ! அதைக்குடுக்காம, தம் பங்குக்கு கொஞ்ச ஆட்களை சேத்துக்கிட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அளும்பு பண்ணினாரு..!

பிஜேபியும் காங்கிரசும் வெளில சொல்ல முடியாத அளவுக்கு காரியம் எல்லாம் பண்ணி அந்த நாற்காலில ஒக்காந்துப்புடணும்னு பாத்தாய்ங்க! நடக்குமா..?
ஒரு வழியா சொகுசு பஸ்செல்லாம் பிடிச்சு எம் எல் ஏ வெல்லாம் ஏத்தி ஒரு 5ஸ்டார் ஓட்டல் சந்துக்குள்ள வச்சு அவுங்களால முடிஞ்சவரைக்கும் என்ஜாய் பண்ணினாங்க!

குமாரசாமிக்கு ஒரு அப்பா..தேவகவுடா தேவகவுடா ன்னு பேரு..உண்மையா அசுரகவுடான்னு வச்சிருக்கணும்..அந்த ஆள் பாட்டுக்கும், தன் கட்சிக்கும் மகனுக்கும் நல்லது (நமக்கு கெட்டது) நடக்கணும்னா எதுவேணும்னாலும் செய்யுற பார்ட்டி..அவரும் எவ்வளவு நாள்தான் பதவி வெறியே இல்லாத மாதிரி நடிக்கிறது..?

கூட்டு சேந்தவன் கெஞ்சுன கெஞ்சுல, சரி மாப்ளே..நீயே முதலமைச்சரா இரு! ஆனா நாந்தான் துணை முதல்வர்ன்னு ஒரு வழியா பேசி முடிவுக்கு வந்தாய்ங்க..!

வந்தாய்ங்களா..!அந்த ஆளும்..அதான் நம்ப எடியூரப்பா! குடும்பம் குட்டியோட போட்டால்லாம் புடிச்சு அந்த பாழாப்போன நாற்காலில
ஒக்காந்தாரு.அப்பறம்தான் தெரிஞ்சுது.அதுக்கும் ஆப்பு இருக்குன்னு.!

சரி வந்தது வந்துட்டோம். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு (பாருங்க..அதுலயே கெடுப்பு இருக்கு) கழுதையை முடிப்போம்னு அந்த ஆள் 'நம்பி ' சட்டசபைக்கு வந்தாரு..வந்தப்புறம்தான் தெரிஞ்சுது..சனியன் சடை பின்னி பூ வைக்காம
போகாதுன்னு! அசுர கவுடா கவுத்துப்புட்டாருல்ல..அழுதுக்கிட்டே வெளீல போனான் மனுஷன்.

கடைசியா குமாரசாமி இப்ப சொல்றாரு."கர்நாடகால கட்சியெல்லாம் கெட்டுப்போச்சு! நான் புதுசா கட்சி ஆரம்பிச்சுத்தான் கர்நாடகாவை சாப்பிடணும்"னு !

அடப்பாவிகளா..இவ்வளவு கூத்தடிக்கிறீங்களே..எங்க காசை தின்னுப்புட்டு, எங்க ஓட்டை வாங்கிக்கிட்டு, ஒரு மாநிலத்தையே தொங்கல்ல விடுறீங்களே.நீங்கள்லாம் மனுசந்தானான்னு ஒரு பொது ஜனம் கூட கேக்கலயா? தர்ணா பண்ணலையா? பஸ்ஸை கொளுத்தலையா? இல்ல.. அவனுங்களையே கொளுத்தலையான்னு கேட்டா..

அவுங்க சொல்றாங்க..நாங்க கேக்கலாம்னு பாத்தோம்..எம் எல் ஏ ல ஒருத்தன் சொல்றான்.நம்ம மக்கள் எவ்வளவு இளிச்சவாயனா ஆக்கினாலும் தாங்கிக்குவாங்க..ஏன்னா அவுங்க ரொம்ப "நல்லவுங்க"....ஊஊஊஊஊ...
தனிப் பக்கத்தில் காண →